நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? |
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகிவிட்டார் கன்னட நடிகரான யஷ். நாடக நடிகர், டிவி நடிகர், சினிமா நடிகர் என அவரது பயணம் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து உயர்ந்து இப்போது பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்திற்கும் ஒப்பந்தமாகிவிட்டார். ஆனால், 'கேஜிஎப்' படத்திற்காக எட்டு ஆண்டுகள் வரை உழைத்த யஷ் தனது அடுத்த படம் பற்றிய எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.
'கேஜிஎப் 2' படத்தின் 50வது நாளில் அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கன்னடத்தில் 'முப்டி' என்ற படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் யஷ் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'முப்டி' படம்தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க தமிழில் 'பத்து தல' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. முதலில் இப்படத்தை இயக்க ஆரம்பித்த நார்தன் பின்னர் விலகிவிட்டார்.
'கேஜிஎப் 3' படம் உருவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பிரசாந்த் நீல் 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' படங்களை முடித்த பிறகே 'கேஜிஎப் 3' படத்திற்கு வர முடியும். எனவே, யஷ் அடுத்து ஒரு பான்--இந்தியா படத்தில் நடிக்காமல், ஒரு கன்னடப் படத்தில்தான் நடிப்பார் என உறுதியாகக் கூறுகிறார்கள்.