கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகிவிட்டார் கன்னட நடிகரான யஷ். நாடக நடிகர், டிவி நடிகர், சினிமா நடிகர் என அவரது பயணம் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து உயர்ந்து இப்போது பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்திற்கும் ஒப்பந்தமாகிவிட்டார். ஆனால், 'கேஜிஎப்' படத்திற்காக எட்டு ஆண்டுகள் வரை உழைத்த யஷ் தனது அடுத்த படம் பற்றிய எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.
'கேஜிஎப் 2' படத்தின் 50வது நாளில் அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கன்னடத்தில் 'முப்டி' என்ற படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் யஷ் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'முப்டி' படம்தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க தமிழில் 'பத்து தல' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. முதலில் இப்படத்தை இயக்க ஆரம்பித்த நார்தன் பின்னர் விலகிவிட்டார்.
'கேஜிஎப் 3' படம் உருவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பிரசாந்த் நீல் 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' படங்களை முடித்த பிறகே 'கேஜிஎப் 3' படத்திற்கு வர முடியும். எனவே, யஷ் அடுத்து ஒரு பான்--இந்தியா படத்தில் நடிக்காமல், ஒரு கன்னடப் படத்தில்தான் நடிப்பார் என உறுதியாகக் கூறுகிறார்கள்.