ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

'கேஜிஎப் 2' படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் உயர்த்தியவர் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதியன்று வெளியானது.
'சலார்' படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கும், ஜுனியர் என்டிஆரின் 31வது பட அறிவிப்பு போஸ்டருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே ரவுடி கதைகள் போலத்தான் இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களின் டிசைன்களுமே வெளிப்படுத்துகின்றன. இரண்டு போஸ்டர்களிலும் படத்தின் ஹீரோக்கள் கருப்பு வெள்ளையில்தான் இடம் பெற்றுள்ளார்கள்.
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரு 'ரா'வான படமாகத்தான் எடுத்திருந்தார் பிரசாந்த் நீல். அது போன்றே 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' ஆகிய படங்கள் இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து தங்களது அதிருப்தியை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே மாதிரியான டிசைன், கதை இருந்தால் அது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். 1000 கோடி வசூலைக் கொடுத்த பிரசாந்த் நீலுக்கு இது புரிந்திருக்காதா என்ன?