இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை தொடர்ச்சியாக இயக்கிய சிவா அதையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால் திடீரென்று ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா படத்தை தள்ளி வைத்துவிட்டு ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக சூர்யாவை இயக்குவதற்கு சிவா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாலா இயக்கும் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள சூர்யா, சிவா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவை வைத்து இயக்கும் படத்தை பீரியட் கலந்த ஆக்சன் கதையில் இயக்குகிறாராம் சிவா. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.