அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை தொடர்ச்சியாக இயக்கிய சிவா அதையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால் திடீரென்று ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா படத்தை தள்ளி வைத்துவிட்டு ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக சூர்யாவை இயக்குவதற்கு சிவா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாலா இயக்கும் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள சூர்யா, சிவா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவை வைத்து இயக்கும் படத்தை பீரியட் கலந்த ஆக்சன் கதையில் இயக்குகிறாராம் சிவா. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.