இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ஜூன்3ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளன்று திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், அதிகாலை காட்சியில் அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்குரிய விற்பனை வரியை அரசுக்கு முறையாக செலுத்துவதில்லை என்றும் அந்த மனுவில் கூறி இருப்பதோடு, தமிழக அரசின் சட்ட விதிகளின்படி இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடக்கூடாது. ஆனால் விதிகளை மீறி பல திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.