'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை ‛சேத்துமான்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். தமிழ் என்ற புதியவர் இயக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள மாசற்ற அன்பை பேசும் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் தாத்தா வேடத்தில் மாணிக்கமும், பேரன் வேடத்தில் அஸ்வினும் நடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. அதோடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருது பெற்றது. இந்நிலையில் இந்த படம் மே 27ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.