மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை ‛சேத்துமான்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். தமிழ் என்ற புதியவர் இயக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள மாசற்ற அன்பை பேசும் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் தாத்தா வேடத்தில் மாணிக்கமும், பேரன் வேடத்தில் அஸ்வினும் நடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. அதோடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருது பெற்றது. இந்நிலையில் இந்த படம் மே 27ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.