'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்ற படம் 'மாநாடு'. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட்டும், சம்பளமும் உயர்ந்தது.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஏஆர் ரகுமான் இசை என்பது படத்திற்கு மற்றொரு பிளஸ் பாயின்ட். இப்படத்தின் வியாபாரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம்.
டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக ஒரு தகவல். படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை , ஹிந்தி உரிமை 25 கோடிக்கும் விற்கப்பட்டுவிட்டதாம். இதன் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் அதில் பாதிதான் என்கிறார்கள். இந்த உரிமைகளிலேயே 25 கோடி லாபம் வந்துள்ளது. இன்னும் தியேட்டர்கள் உரிமைகளை விற்றால் அதில் ஒரு பெரும் தொகை கிடைக்கும்.
இவ்வளவுக்கும் காரணம் 'மாநாடு' படத்தின் வெற்றிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். 'மாநாடு' படத்தின் வெற்றியால் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு இதுவரை வசூல் கணக்கை வினியோகஸ்தர்கள் தரவில்லை. அதே சமயம், அதன் வெற்றியால் சிம்புவின் அடுத்த வெளியீடான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதை ஆச்சரியமாகப் பார்க்கிறது கோலிவுட்.