'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகை பாவனாவுக்கு அவரது சொந்த வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அந்த கசப்பான நிகழ்வுகளின் நினைவில் இருந்து வெளியேறி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கன்னட சினிமாவில் அதிகம் நடிக்கிறார். அடுத்து மலையாளத்திலும் நடிக்க உள்ளார்.
தற்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஹாய்' புகழ் ஜிஎன் ருத்ரேஷ் இயக்குகிறார். இதில் பாவனா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இது இரட்டை சகோதரிகள் பற்றிய கதை. அடுத்து, திக்கக்கக்கொரு பிரேமொண்டர்ன் என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். இதனை ஆதில் மைமூநாத் அஷ்ரப் இயக்குகிறார். பாவனாவுடன் ஷரபுதீன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது தவிர தி சர்வைவல் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இது மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு படம். இதில் பாவனா குத்துச் சண்டை வீராங்கணையாக நடித்திருக்கிறார். மார்பு புற்றுநோயல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதனை எதிர்த்து போராடி எப்படி வாழ்க்கையிலும், குத்துச் சண்டையிலும் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.