நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் மாலைநேர மல்லிப்பூ. 21 வயது இளைஞர் சஞ்சய் நாராயண் இயக்குகிறார். விஜயலட்சுமி நாராயணன் தயாரிக்கிறார். ஹிர்த்திக் சக்திவேல் இசை அமைக்கிறார். நாய்துப் டோர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சஞ்சய் நாராணயன் கூறியதாவது: பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த படம் இருக்கும். நான் கேள்விப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளியின் கதை. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.
மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை சொல்லும் படம். இந்த சிக்கலான வாழ்க்கை சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, 'என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் படத்தின் முக்கிய பகுதி. ஓடிடி தளத்தில் வெளியாகிறது. என்றார்.