பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வானத்தை போல சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தவர் ஸ்வேதா கெல்கே. பெங்களூரை சேர்ந்த ஸ்வேதா ஐடி துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அதன்பின் சினிமா துறையில் கால்பதித்த அவர், சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், திடீரென வானத்தை போல சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் புரியாத நிலையில் ஸ்வேதாவை இனி பார்க்கவே முடியாதா? என ரசிகர்கள் வருந்தமடைந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்வேதா கெல்கே தமிழ் சின்னத்திரையில் புது சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
ஸ்வேதா கெல்கே கலைஞர் டிவியில் புதிதாக உருவாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் கேஜிஎப் நடிகை மாளவிகா, 'எதிர்நீச்சல்' தொடரில் நடித்து வரும் அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த தொடருக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'கண்ணெதிரே தோன்றினாள்' வருகிற ஜூன் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.