கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது ஒவ்வொரு படம் வெளியாகும்போது தனது தந்தையின் பெயரில் நடத்திவரும் தாஸ் அறக்கட்டளை மூலம் ஏதாவது ஒரு குறிப்பிடத்தகுந்த சமூக சேவை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அந்த வரிசையில் தற்போது அவர் நடித்துள்ள டான் படம் நாளை வெளிவரும் நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
சுமார் 21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட இந்த ஆம்புலன்சை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக வழங்கியுள்ளார். நேற்று இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான விழா மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்தது. சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.