மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
பிரபல மலையாள நடிகர் ஜெயராம். அங்கு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயராம் தமிழில் பஞ்சதந்திரம், தெனாலி, கோகுலம், துப்பாக்கி, உத்தம வில்லன், உள்பட பல படங்களில் நடித்துள்ளார் இவரது மனைவி பார்வதியும் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். இந்த தம்பதிகளுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளனர்.
இதில் காளிதாஸ் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாளவிகாவும் சினிமாவுக்கு வருகிறார். முறைப்படி நடனம், நடிப்பு கற்றுள்ள மாளவிகா தற்போது விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ," மாயம் செய்தாயோ பூவே" என்ற இசை ஆல்பத்தில் அசோக் செல்வன் உடன் நடித்தார். இந்த இசை ஆல்பத்தை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார், கிரிதரன் இசையமைத்துள்ளார்.
இந்த ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சினிமாவில் அறிமுகமாக தயாராகிவிட்டார் மாளவிகா. இதற்காக கதைகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார். அனேகமாக அவர் மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.