'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தனது 41ஆவது படத்திலும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதை அவரது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மீனவர்கள் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அங்கு படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குநர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இதனால் கோபமடைந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி விட்டதால் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த செய்தியை சூர்யா தரப்பு மறுத்துள்ளது.
இதுபற்றி 2டி நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛கன்னியாகுமரியில் 34 நாளில் சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் கோவாவில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.