தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே சம்பளம் விஷயத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை :
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மே 2 அன்று நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் மார்ச் 9ம் அன்று இரு தரப்பினர் இடையே நடந்தது. ஆனால் ஒப்பந்தத்தை அவமதிக்கும் வகையில் பெப்சி அமைப்பினர் செயல்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தமான ரத்து செய்யப்படுகிறது. இனி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையேயான மோதல் அதிகமாகி உள்ளது.