கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஒரு நாட்டுப்பற்று மிக்க படம் என்றும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் மைய கதை என்றும் கூறப்படுகிறது . இதற்காக மத்திய அரசிடம் சில முன் அனுமதி வாங்கும் பணி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் முதல் பான் - இந்திய திரைப்படம் இதுதான் என்று கூறப்படுது.
இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணையவுள்ளனர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .