தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மும்பைக்கு பறந்து உள்ளார் சூர்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தை ஹிந்தியில் சூர்யாவின் 2டி நிறுவனமும் பிரபலமான அபுண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் என்கிற பாலிவுட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளை முடுக்கி விடுவதற்காக சூர்யாவும் அவரது நண்பரும் 2டி சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளருமான ராஜசேகரும் மும்பை சென்றுள்ளனர்.