மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மும்பைக்கு பறந்து உள்ளார் சூர்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தை ஹிந்தியில் சூர்யாவின் 2டி நிறுவனமும் பிரபலமான அபுண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் என்கிற பாலிவுட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளை முடுக்கி விடுவதற்காக சூர்யாவும் அவரது நண்பரும் 2டி சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளருமான ராஜசேகரும் மும்பை சென்றுள்ளனர்.