ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மும்பைக்கு பறந்து உள்ளார் சூர்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தை ஹிந்தியில் சூர்யாவின் 2டி நிறுவனமும் பிரபலமான அபுண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் என்கிற பாலிவுட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளை முடுக்கி விடுவதற்காக சூர்யாவும் அவரது நண்பரும் 2டி சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளருமான ராஜசேகரும் மும்பை சென்றுள்ளனர்.