பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
நானும் ரவுடிதான் படபிடிப்பு நடந்து வந்தபோது காதல் வயப்பட்ட நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில், தங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதன் பிறகு வருகிற ஜூன் மாதம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊரில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களது திருமணத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.