சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சிலம்பரசன் நடித்த 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த பத்து வருடங்களில் மூன்றே மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2015ல் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படம் இயக்குனராக அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதன்பிறகு 2018ல் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வரும் ஏப்.,28ம் தேதி வெளியாகிறது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில், ‛படம் வெளியாவதற்கு முன்பு இருக்கும் இந்த 5 நாட்கள் தான் பிரசவ வலியை போன்றது. என் லவ்வுடன், பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த வலி தேவை தான். ஏனென்றால் காதல் என்றாலே வலி இருக்கும். இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் இந்த படத்தில் அருமையாக நடித்து இருக்கின்றனர்.இந்த படத்திற்காக நேசத்துடன் அதிகம் உழைத்திருக்கிருக்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.