என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், இன்ஸ்டாகிராமில் காட்டிய கவர்ச்சியின் காரணமாக சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது கமல் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஷிவானிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு ரசிகர் ஷிவாணிக்கு கிப்ட் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெர்ஷட்லி பாரத் என்ற ரசிகர், ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து பிரேம் செய்து அதில், ஷிவானி குறித்து கவிதை ஒன்றி எழுதி கிப்ட்டாக வழங்கியுள்ளார். இதை பார்த்து இன்ப அதிர்ச்சியடையும் ஷிவானி இது நீங்க எழுதிய கவிதையா என்று கேட்டு, அந்த கவிதையை அவரையே படிக்க சொல்கிறார். அந்த ரசிகர் அதை பாடலாகவே பாடிவிட, ஷிவானி அந்த ரசிகருக்கு நன்றி சொல்கிறார். கிப்டை வாங்கிக் கொண்டு கவிதையை கேட்டு வெட்கத்துடன் நிற்கும் ஷிவாணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.