ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், சமூக வலைதளங்களில் பிரபலமான நபராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், இன்ஸ்டாகிராமில் காட்டிய கவர்ச்சியின் காரணமாக சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது கமல் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஷிவானிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு ரசிகர் ஷிவாணிக்கு கிப்ட் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெர்ஷட்லி பாரத் என்ற ரசிகர், ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து பிரேம் செய்து அதில், ஷிவானி குறித்து கவிதை ஒன்றி எழுதி கிப்ட்டாக வழங்கியுள்ளார். இதை பார்த்து இன்ப அதிர்ச்சியடையும் ஷிவானி இது நீங்க எழுதிய கவிதையா என்று கேட்டு, அந்த கவிதையை அவரையே படிக்க சொல்கிறார். அந்த ரசிகர் அதை பாடலாகவே பாடிவிட, ஷிவானி அந்த ரசிகருக்கு நன்றி சொல்கிறார். கிப்டை வாங்கிக் கொண்டு கவிதையை கேட்டு வெட்கத்துடன் நிற்கும் ஷிவாணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.