20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. அந்த வகையில் நான்கு நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது கேஜிஎப் மூன்றாம் பாகத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ்- ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குகிறார். இதற்கு பின் கேஜிஎப் 3 துவங்கும் என தெரிகிறது.