15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. அந்த வகையில் நான்கு நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது கேஜிஎப் மூன்றாம் பாகத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ்- ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குகிறார். இதற்கு பின் கேஜிஎப் 3 துவங்கும் என தெரிகிறது.