நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சினிமா என்பது இயக்குனர்களின் மீடியம் தான். அவர்களது கற்பனையில், கருத்தாக்கத்தில் தான் ஒரு படம் உருவாகிறது என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் ஹீரோக்கள்தான் மிகப் பெரிய வெற்றியையும், பெயரையும் பெறுகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சினிமா நடிகர்களின் கைகளில் சென்றுவிட்டது. நடிகர்கள் கை காட்டும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்தான் படங்களை எடுக்கிறார்கள். படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குப் பிடிக்கவில்லையா வசனத்தை மாற்றுகிறார்கள், காட்சிகளை மாற்றுகிறார்கள், ஏன் கதையையே மாற்றுகிறார்கள்.
தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்களில் இப்போதும் இயக்குனர்களக்குத்தான் அதிக மரியாதை. அவர்களை நம்பி தங்களை ஒப்படைத்தவர்கள் இன்று இந்திய அளவில் புகழ் பெற்று பான்--இந்தியா ஹீரோக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழில், பிரம்மாண்டத்தை ஆரம்பித்து வைத்தவர் இயக்குனர் ஷங்கர். அவரை முன்னுதாரணமாக வைத்து தெலுங்கில் படங்களை இயக்க ஆரம்பித்தவர் ராஜமவுலி. 'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வெற்றி மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அவர்களது வரிசையில் 'கேஜிஎப் 1, 2' இயக்குனர் பிரசாந்த் நீல் இடம் பிடித்துவிட்டார்.
தென்னிந்திய சினிமா இயக்குனர்கள், இந்திய சினிமா இயக்குனர்களாக உயரந்து புதிய சாதனைகளை படைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.