'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது.
சென்னையில் எளிமையாக நடைபெற்ற பூஜைக்குப் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை சென்னையில் அதிகமாகப் படமாக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை மற்ற ஹீரோக்கள் போல ஐதராபாத்தில் நடத்தாமல் சென்னையில் நடத்துபவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான முதல் அப்டேட்டை படத்தின் நாயகி ராஷ்மிகா கொடுத்துள்ளார். பூஜையின் போது அவர் எடுத்த தனி புகைப்படங்களைப் பகிர்ந்து “இந்த ஓரிரு நாட்கள் மிகச் சிறப்பானது…இந்த மேஜிக்கை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை…” என்று பதிவிட்டுள்ளார். அவர் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றித்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும். ராஷ்மிகாவின் இந்தப் பதிவிற்கு 28 லட்சம் லைக்குகள் குவிந்துவிட்டது.