20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ராஜமவுலி படங்களின் பிரமாண்டத்துக்கும், வெற்றிக்கும் தனித்தன்மை வாய்ந்த கதைகளை உருவாக்கி கொடுத்து பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் என்கிற மிகப்பெரிய இலக்கை தொட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டு தூண்களாக நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் கதாபாத்திர தேர்வு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
“இந்தப்படத்தின் கதையை உருவாக்கும்போதே இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் தான் நடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டோம்.. அதன்பின் அல்லூரி சீதாராம ராஜூ வேடத்தில் ராம் சரணையும், கொமரம் பீம் கதாபாத்திறல் ஜூனியர் என்டிஆரையும் நடிக்க வைக்க முடிவு செய்தோம்..
காரணம் ஜூனியர் என்டிஆரால் சீதாராம் கேரக்டரிலும் நடிக்க முடியும்.. கொமரம் பீமாகவும் நடிக்க முடியும்.. ஆனால் ராம்சரணுக்கு கொமரம் பீம் கதாபாத்திரம் செட்டாகாது. ஏனென்றால் கொமரம் பீம் கதாபாத்திரம் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய ஒன்று.. ஜூனியர் என்டிஆர் இயல்பாகவே அதில் பொருந்தி விடுவார்.. அதேசமயம் எந்நேரமும் சீரியஸாக இருக்கும் சீதாராம் கதாபாத்திரத்திற்கு ராம்சரண் ரொம்பவே பொருத்தமாக இருந்தார்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.