வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
வடிவேலு யூனிட்டில் காமெடி ரைட்டராக இருந்த தம்பி ராமையா மனுநீதி என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு வடிவேலு நடிக்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்கள். ஒருகூடை முத்தம் என்ற படம் இயக்கிக் கொண்டிருந்தபோதுதான் மைனா மூலம் விருது பெற்று தீவிர நடிகர் ஆனார் ஒரு படத்தில் நடிக்க சில ஆயிரங்கள் வாங்கிய தம்பி ராமையா இப்போது ஒரு நாள் நடிக்க சில லட்சங்கள் வாங்குகிறார். இந்த நிலையில் அவர் படம் இயக்கவும் இருக்கிறார். "நடிப்பில் பிசியாக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு இயக்குனர். நடிப்பில் நாலு காசு வருது. அதுக்கு பங்கம் வந்திடாம படம் இயக்கும் ஆசையில் இருக்கிறேன். ரெண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக் கிளியும் என்பது படத்தின் தலைப்பு. கதைக்கு தேவையான நடிகர்களை செலக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். தயாரிப்பாளரும் ரெடி. சீக்கிரமே சூட்டிங் போறோம்" என்கிறார் தம்பி ராமையா.