இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பேட்ட படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் குறுகிய காலத்திலேயே முன்னணி வரிசை கதாநாயகியாக மாறினார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைக்கவும் தவறுவது இல்லை. ஆனால் தற்போது கன்னத்தில் முகப்பருவுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் மாளவிகா
அவர் கூறுகையில், “நடிகைகள் என்றால் எப்பொழுதுமே பளபளப்பான தோலுடன் தான் இருப்பார்கள் என பலரும் நினைப்பார்கள். ஆனால் நேற்று எனக்கு முக்கியமான படப்பிடிப்பு இருந்த நிலையிலும் கூட கடந்த இரண்டு நாட்களாக கன்னத்தில் தோன்றிய இந்த முகப்பரு என்னை பழி தீர்த்து வருகிறது. எவ்வளவு அழகான சருமம் என நாங்கள் நடிக்கும் விளம்பரத்தை பார்த்து ஆச்சரியப்படும் மக்களுக்கு, எங்களுக்கும் இதுபோன்ற உடல்நல குறைபாடுகள் வரும் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். இருந்தாலும் இதுபோன்ற முகப்பருக்களோ அல்லது வேறு எதுவோ வந்தாலும் கூட அவற்றை விரைவில் திரும்பி சென்று விடும் ஒரு அழையா விருந்தாளியாக நினைத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்” என்றார்.