பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை மிகவும் கடினமான போட்டியாளராக இருந்தார் ஜூலி. முந்தைய சீசனில் செய்த தவறை செய்யாமல், தான் இழந்த பெயரை மீண்டும் பெறுவதற்காக மக்களிடம் தன்னை நிரூபிப்பதற்காக விளையாடினார் ஜூலி. கடைசி வாரம் வரை வந்துவிட்டதால் கண்டிப்பாக இறுதிபோட்டியில் ஜூலி விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜூலி இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி, சமூக வலைதளத்தில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'வெற்றி என்பது இறுதியில் நாம் எதை பெற்றோம் என்பது அல்ல. வெற்றிக்கான பயணத்தில் நாம் யாராக இருந்தோம் என்பதே முக்கியம்' என பதிவிட்டிருந்தார். ஜூலியின் இந்த பாசிட்டிவான ஆட்டிட்யூட் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜூலிக்கு ஆதரவாக பேசி வரும் பலரும் 'நீ மக்கள் மனதை வென்றுவிட்டாய். இது தான் உனது வெற்றி' என அவரை புகழ்ந்து வருகின்றனர்.




