பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
திருமணப் பிரிவு ஏற்பட்டாலும் தனது முன்னாள் மாமனார் வீட்டுக் குடும்பத்தினருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை சமந்தா சரியாகக் கொடுத்து வருகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் அவரைப் பாராட்டி வருகின்றன.
நாக சைதன்யாவுடனான தனது திருமணப் பிரிவுக்குப் பிறகு முன்னாள் கணவரது குடும்பத்தைப் பற்றி எந்த ஒரு தவறான கருத்துக்களையும் சமந்தா பதிவிட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
நாக சைதன்யாவின் தம்பியும், தனது முன்னாள் மைத்துனருமான, நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் ஒரே மகனும், நடிகருமான அகில் நேற்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
தன் சமூகவலைதள பக்கத்தில் அவரது புகைப்படத்தையும் பகிர்ந்து சமந்தா, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அகில். இந்த வருடம் மிகச் சிறந்தது உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகள். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும், உங்களுக்குக் கிடைக்க நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறேன், பிரார்த்தனையும் செய்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.