சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

கேஜிஎப் படம் மூலம் தமிழகத்திலும் ரசிகர்களைப் பெற்றவர் கன்னட நடிகரான யஷ். அவரது நடிப்பில் 'கேஜிஎப் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இது பற்றி கேள்விப்பட்ட யஷ் ரசிகர்கள் நேற்று அந்த ஓட்டல் இருக்கும் தெரு முன் திரண்டு நின்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிட்டார்களாம். இது பற்றி கேள்விப்பட்ட யஷ் உடனே ஓட்டல் நிர்வாகத்தினரிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்று, அந்த ரசிகர்களை ஓட்டலின் போர்ட்டிகோவுக்கு வரவழைத்திருக்கிறார்.
அங்கு ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்து அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த திடீர் நிகழ்வால் பத்திரிகையாளர் சந்திப்பு ஆரம்பமாவதும் தாமதமாகி இருக்கிறது.
தமிழில் உள்ள டாப் ஹீரோக்கள் பொதுவாக அவர்களது திரைப்பட விழாக்களுக்கு அதிகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களைச் சுற்றி பத்து, பதினைந்து பாதுகாவலர்களுடன் வந்து தங்களை யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்வார்கள்.




