நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
தனது சினிமா கேரியரில் எத்தனையோ நடிகர்-நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். சீனியர் கலைஞர்கள்கூட அவர் படத்தில் நடிக்க வரும்போது புதுமுகங்கள் ரேஞ்சுக்கு மாறிவிடுவார்கள். அந்த அளவுக்கு இதுவரை நடித்ததை மறந்து விட்டு புதுசாக தங்களை புதுப்பித்துக்கொண்டு நடிப்பார்கள். அதோடு புதிதாக கேமரா முன்பு வருவது போன்ற அச்சமும் அவர்களின் முகத்தில் இருக்கும். இதை தற்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்துள்ள அர்ஜூனே கூறியுள்ளார்.
ஆனால் இதே கடல் படத்தில் அறிமுகமாகியுள்ள மாஜி நடிகை ராதாவின் மகளான துளசி மணிரத்னம் படம் என்றபோதும் சரி, கேமரா முன்பு நின்றபோதும் சரி துளியும் அச்சம் கொள்ளவில்லையாம். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவரைப்போன்று கேசுவலாக நடித்தாராம். இதை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து ஆச்சரியப்பட்ட மணிரத்னம், அதை கடல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையில் துளசியிடம் கேட்டார். அதற்கு, எதற்கு பயப்பட வேண்டும். நான் நானாக இருந்தால்தானே பயப்பட வேண்டாம். நான் அந்த கேரக்டராக மாறியல்லவா ஸ்பாட்டில் நின்றேன் என்று மணிரத்னத்தையே புல்லரிக்க வைத்தார் துளசி. அதோடு, மேலும், நடிப்பு என்பது என்னைப்பொறுத்தவரை புதியதாக இருந்தாலும், என் அம்மா, பெரியம்மா, மாமா, அக்கா என எங்கள் குடும்பமே சினிமா குடும்பம்தானே. அதனால் நடிப்பதற்கும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை என்றார் துளசி.