ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் நடிகையான சமந்தா தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
மேலும், ஏற்கனவே ‛தி பேமிலி மேன்-2' வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார் சமந்தா. அதையடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டில் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் சமந்தா, இதுவரை மும்பையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தவர் தற்போது மும்பை கடற்கரை பகுதியில் மூன்று கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் ஹைதராபாத்தை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பையில் குடியேறி விடுவார் என்றும் கூறப்படுகிறது.