'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் நடிகையான சமந்தா தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
மேலும், ஏற்கனவே ‛தி பேமிலி மேன்-2' வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார் சமந்தா. அதையடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டில் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் சமந்தா, இதுவரை மும்பையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தவர் தற்போது மும்பை கடற்கரை பகுதியில் மூன்று கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் ஹைதராபாத்தை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பையில் குடியேறி விடுவார் என்றும் கூறப்படுகிறது.