AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
தமிழ் நடிகையான சமந்தா தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
மேலும், ஏற்கனவே ‛தி பேமிலி மேன்-2' வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார் சமந்தா. அதையடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டில் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் சமந்தா, இதுவரை மும்பையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தவர் தற்போது மும்பை கடற்கரை பகுதியில் மூன்று கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் ஹைதராபாத்தை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பையில் குடியேறி விடுவார் என்றும் கூறப்படுகிறது.