இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கி வருபவர் நடிகர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு. இவருக்கும் நடிகர் சிலம்பரசன் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், சில வருடங்களுக்கு முன் 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 2' நிகழ்ச்சியின் போது போட்டியாளராக இருந்த பப்லுவுக்கும், நடுவராக இருந்த சிம்புவுக்கு இடையே முட்டிக்கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா நட்சத்திரங்களின் சண்டையில் இதுவும் ஒன்று. அப்போதே சிம்புவின் ரசிகர்கள் பலர் பப்லுவை கோபத்தில் திட்டித்தீர்த்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பப்லு அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சிம்புவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் அவர், 'சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்' என கூறியுள்ளார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பப்லு மீது கடும் கோபத்தில் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் பப்லுவுக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.