ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கி வருபவர் நடிகர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு. இவருக்கும் நடிகர் சிலம்பரசன் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், சில வருடங்களுக்கு முன் 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 2' நிகழ்ச்சியின் போது போட்டியாளராக இருந்த பப்லுவுக்கும், நடுவராக இருந்த சிம்புவுக்கு இடையே முட்டிக்கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா நட்சத்திரங்களின் சண்டையில் இதுவும் ஒன்று. அப்போதே சிம்புவின் ரசிகர்கள் பலர் பப்லுவை கோபத்தில் திட்டித்தீர்த்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பப்லு அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சிம்புவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் அவர், 'சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்' என கூறியுள்ளார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பப்லு மீது கடும் கோபத்தில் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் பப்லுவுக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.