பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மும்பை:'பாலிவுட்'டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, 50, ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கு, நடனம் அமைத்துள்ளார். பல விருதுகளை பெற்ற இவர், சமீபத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமான, 'ஊ சொல்றியா... மாமா...' என்ற பாடலுக்கும் நடனம் அமைத்தார்.
கடந்த 2020ல், நடனக் குழுவில் இருந்த ஒரு பெண்ணை, கணேசும், அவரது உதவியாளரும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அந்தப் பெண் அளித்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்தார். இந்நிலையில், இந்த வழக்கில், மும்பை போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.