இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
ஹாலிவுட் நடிகை கங்கனா ரணவத் மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசக்கூடியவர்.. பாலிவுட்டில் நிலவும் நெபோடிசத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கங்கனா, இந்த நெபோடிசத்துக்கு தலைவர் என தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரை அவ்வப்போது வார்த்தைகளால் குறிவைத்து தாக்கி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போர் ஒன்றும் புதிதல்ல. என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் கரண் ஜோஹரை சீண்டுவதற்கும் கிண்டலடிப்பதற்கும் கங்கனா தயங்குவதில்லை.
அந்தவகையில் தற்போது கங்கனா ரணவத் ஓடிடி தளத்தில் லாக்கப் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 19 நாட்களுக்குள்ளேயே 200 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட கங்கனா, இதன்பிறகு கூறியதுதான் மறைமுகமாக கரண் ஜோஹரை கிண்டலடிப்பது போல அமைந்துள்ளது..
இதுபற்றி பதிவிட்டுள்ள கங்கனா, “இந்த 20௦ மில்லியன் பார்வைகள் என்கிற வெற்றியை ஒரு குறிப்பிட்ட சிலரால் ஜீரணிக்க முடியாது.. அந்த கூட்டத்தை வழிநடத்தும் 'பப்பா ஜோ' இந்நேரம் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருப்பார்.. இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாண்டார்கள்.. இப்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்ட நிலையில் இனி அடுத்து என்ன திட்டம் தீட்டுகிறார்கள் என பார்ப்போம்.. உங்களுக்கு அழுவதற்கு இங்கே இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன 'பப்பா ஜோ' என்று அதில் கூறியுள்ளார் கங்கனா ரணவத். பப்பா ஜோ என்பது கரண் ஜோஹரைத்தான் குறிக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.