பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியை கதாநாயகனாக வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த படத்தில் இடம்பெறும் டுடூ டுடு என்கிற சிறப்பு பாடலின் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருந்தது. இந்தநிலையில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் சத்தமின்றி நடைபெற்றுள்ளது.
இந்த பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை வந்து சென்றுள்ளார் சமந்தா. விஜய்சேதுபதிக்கும் சமந்தாவுக்கும் இடையேயான பாடல் தான் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவும் இருந்துள்ளார். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஓ சொல்றியா மாமா என்கிற பாடலை தொடர்ந்து இந்த பாடலும் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் வடிவமைத்துள்ளார்