'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி வெளிவந்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படம் முதல் நாளிலிருநதே நல்ல வசூலைப் பெற்றது. முதல் வார இறுதி முடிவில் உலக அளவில் இப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஐந்து மொழிகளிலும் படத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருப்பதாக அந்தந்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானோ அச்சம் முழுமையாக விலகாத சூழ்நிலையிலும் இந்தப் படத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மூன்று 500 கோடி படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி. இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 1' படத்தின் மொத்த வசூல் 700 கோடியாகவும், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 1800 கோடியாகவும் இருந்தது. இப்போது 'ஆர்ஆர்ஆர்' 500 கோடி வசூலை மூன்றே நாட்களில் கடந்துள்ள நிலையில் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.