'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி வெளிவந்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படம் முதல் நாளிலிருநதே நல்ல வசூலைப் பெற்றது. முதல் வார இறுதி முடிவில் உலக அளவில் இப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஐந்து மொழிகளிலும் படத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருப்பதாக அந்தந்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானோ அச்சம் முழுமையாக விலகாத சூழ்நிலையிலும் இந்தப் படத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மூன்று 500 கோடி படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி. இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 1' படத்தின் மொத்த வசூல் 700 கோடியாகவும், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 1800 கோடியாகவும் இருந்தது. இப்போது 'ஆர்ஆர்ஆர்' 500 கோடி வசூலை மூன்றே நாட்களில் கடந்துள்ள நிலையில் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.