கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
கேஜிஎப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்க, யஷ், கிர்த்தி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் பிரம்மாண்டமாய் நடந்தது.
கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. எனவே கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக்கள் எழுந்தது .
இதுப்பற்றி கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ் "இது கேஜிஎப் படத்திற்கும் பீஸ்ட் படத்திற்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இரு படங்களும் இணைந்தே வெளியாகின்றன. இது ஒன்றும் தேர்தல் அல்ல. இரண்டு படங்களையும் மக்கள் பார்க்க முடியும். விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் அடைந்த உயரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது கலை பணியும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் தன்மையையும் என்னோடு ஒப்பிட முடியாது. நான் கண்டிப்பாக பீஸ்ட் பார்ப்பேன். அதே போல விஜய் சாரின் ரசிகர்களுக்கும் கேஜிஎப் பிடிக்கும் என நம்புகிறேன். நாம் இணைந்து இந்த இரு படங்களையும் கொண்டாடுவோம்" எனக் கூறியுள்ளார்.