மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கன்னட மொழி பேசப்படும் கர்நாடகாவில் இப்படத்தை கன்னடத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதை விட தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கன்னடப் பதிப்பைப் பார்ப்பதற்கு இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் பதிப்பை பார்ப்பதற்கு மட்டுமே முன்பதிவு நடந்து வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள கன்னட ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரைக் கண்டித்தும், ராஜமவுலியைக் கண்டித்தும் டுவிட்டர் தளத்தில், “#BoycottRRRinKarnataka ” என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்து வருகின்றனர்.




