காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கன்னட மொழி பேசப்படும் கர்நாடகாவில் இப்படத்தை கன்னடத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதை விட தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கன்னடப் பதிப்பைப் பார்ப்பதற்கு இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் பதிப்பை பார்ப்பதற்கு மட்டுமே முன்பதிவு நடந்து வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள கன்னட ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரைக் கண்டித்தும், ராஜமவுலியைக் கண்டித்தும் டுவிட்டர் தளத்தில், “#BoycottRRRinKarnataka ” என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்து வருகின்றனர்.