சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எனது முழு திறமையையும் காட்டி நடிக்க வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை த்ரிஷா ஏக்கத்துடன் கூறியுள்ளார். விஷால்-த்ரிஷா ஜோடி நடித்த சமர் படம் ரிலீசாகியுள்ளது. இதுதவிர பூலோகம், என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ரம் படங்களில் நடிக்கிறார். 10 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கும் த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் பத்து ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து இருக்கிறேன். இது பெரிய விஷயம். இத்தனை காலம் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருப்பது அதிர்ஷ்டம். நான் சினிமா வாய்ப்புகளை தேடிப்போக வில்லை. என்னைத் தேடித்தான் படங்கள் வருகிறது.
இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். உங்களை கேரக்டராக நினைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன். எனவே நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா போட்டி நிறைந்தது. ஆனாலும் எனக்குள்ள இடம் அப்படியே இருக்கிறது. நான் நிறைய கேரக்டரில் நடித்துவிட்டேன். அவற்றில் பல கேரக்டர்கள் என் நிஜ வாழ்க்கையை பிரதி பலிப்பதாக இருந்தன. உண்மையில் நான் எப்படி இருக்கிறேனோ அதே மாதிரி பாத்திரங்கள் இருந்தது. அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவில்லை. நானாக வந்தேன். இதுவரை என் முழு திறமையையும் காட்டுகிற மாதிரி படங்கள் அமையவில்லை. விஷால், ஜெயம் ரவியுடன் நடித்துள்ளேன் இரு படங்களும் தொடர்ந்து வர உள்ளன, என்று கூறியுள்ளார்.