பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
புதியவர்கள் நடித்துள்ள ‛காதல் செய்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இளையராஜாவின் கோடம்பாக்க ஸ்டூடியோவில் நடந்தது. இதில் இளையராஜா, பாரதிராஜா, பி.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டார்கள். கட்டி அணைத்துக் கொண்டார்கள். இருவருக்கு ஒரே ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருவரின் இணைப்பு விழாவாகவே நடந்தது.
இந்த விழாவில் இளையராஜா பேசியது தான் ஹெலைட் அவர் பேசியதாவது: நிகழ்கால பாரதிராஜாக்களே... நிகழ்கால இளையராஜாக்களே... நிகழ்கால பி.வாசுக்களே.... ஏன் எதிர்கால பாரதிராஜாக்களே, இளையராஜாக்களே... ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான். எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை. அதுலாம் பொறந்து வரணும்யா.
திருவள்ளுவரே சொல்லி இருக்காரு 'செல்வம் படச்சவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவன்னா தெளிந்த அறிவோடு இருக்குறவன் தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா தெளிந்த அறிவுடையவனா இருக்குறது கஷ்டம்.
இந்த படத்துக்கு காதல் செய்னு பேர் வச்சுருக்காங்க... என்ன போல காதல் செய்யுறவன் இருக்க முடியாது. ஆனா நான் எத காதலிக்குறனும்கிறதுல தெள்ளியனா இருக்கேன். இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். என்றார்.
இளையராஜா இவ்வளவு ஜாலியாக இதுவரை பேசியதில்லை. சமீபகாலமாக அவரது பேச்சுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.