இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
ஜிவி. பிரகாஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் செல்பி. இந்த படத்தை மதிமாறன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, இது இயக்குனர் மதிமாறனுக்கு முதல் படம். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மேலும் சினிமாவில் தங்களின் முதல் படம் வெற்றி பெற்று விட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும். அடுத்த படத்தில் இந்த உலகத்தையே மாற்ற வேண்டுமென்று யோசிக்கத் தொடங்குவார்கள். அப்படித்தான் நானும் இருந்தேன் நினைத்தேன் என்று கூறிய இயக்குனர் மிஷ்கின், உதவி இயக்குனர்கள் காசிப் பேசுவதை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை மட்டுமே பேசவேண்டும். நெகட்டிவான விஷயங்களை பேசக்கூடாது. அப்படி நல்ல விஷயங்களை மட்டுமே பேசும்போது அது வெற்றிக்கு நம்மை அழைத்துச் செல்லும். இப்படித்தான் இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்ப காலத்தில் சினிமாவை பத்தி நல்ல விஷயங்களாக யோசிப்பார் சிந்திப்பார். அதனால் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இந்த செல்பி படத்தை இயக்கியுள்ள மதிமாறனும் அதை கடைபிடிக்க வேண்டுமென்று கூறினார்.