Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருத்துவ உபகரண ஊழல் பற்றி பேசும் பேட்டரி

18 மார், 2022 - 14:07 IST
எழுத்தின் அளவு:
'Battery'-talking-about-medical-equipment-corruption

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் உள்பட பலர் நடித்திருகிறார்கள். வஸந்த், மணிரத்னம் , சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிபாரதி இயக்கியிருக்கிறார், சித்தார்த் விபின் இசை அமைத்திருக்கிறார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி மணிபாரதி கூறியதாவது: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இத்திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் செலவு என்பது ஒரு எளிதில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

அப்படிப்பட்ட மருத்துவ துறைக்கு வாங்கப்படும் உபகரணங்களில் முறைகேடு நடக்கும் போது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அதனால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்றதை நெஞ்சம் பதைபதைக்க சொல்லும் ஒரு க்ரைம் திரில்லர் படம்.

இந்த படத்திற்காக சித்தார்த் விபின் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடி கொடுத்திருக்கிறார். அவருடன் சக்திஸ்ரீ கோபாலன் இணைந்து பாடி உள்ளார்.போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.

அப்போது அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார். "நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே என்னில் ஏதோ ஆனது நீதானே.." என்று தொடங்கும் பாடலை நெல்லை ஜெயந்தா எழுதி உள்ளார். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'செல்ஃபி'  மூன்று மடங்கு லாபம் தரும்: தாணு நம்பிக்கை'செல்ஃபி' மூன்று மடங்கு லாபம் ... ஜூன் 17ம் தேதி, ஆர்.ஜே.பாலாஜி வீட்ல விஷேசம் ஜூன் 17ம் தேதி, ஆர்.ஜே.பாலாஜி வீட்ல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in