துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் ரகுமான். துருவங்கள் பதினாறு பட வெற்றிக்கு பிறகு தமிழில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த வைரஸ் என்கிற படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எதிரே' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். அமல்ஜோபி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் சேது கதை எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரகுமான். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது படப்பிடிப்பில் இவர் பெரும்பாலும் வசனம் பேசியது எல்லாம் 'எதிரே' வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பார்த்து தானாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் திரில்லராக வித்தியாசமான முறையில் இந்த கதையை கதாசிரியர் சேது உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் ரகுமான்.