நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் ரகுமான். துருவங்கள் பதினாறு பட வெற்றிக்கு பிறகு தமிழில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த வைரஸ் என்கிற படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எதிரே' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். அமல்ஜோபி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் சேது கதை எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரகுமான். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது படப்பிடிப்பில் இவர் பெரும்பாலும் வசனம் பேசியது எல்லாம் 'எதிரே' வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பார்த்து தானாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் திரில்லராக வித்தியாசமான முறையில் இந்த கதையை கதாசிரியர் சேது உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் ரகுமான்.