22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.எஸ்.ரவிக்குமார். பின்னர் அவரும் இயக்குனராகி ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படங்களை இயக்கி விட்டார். சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கே.எஸ். ரவிக்குமார் தற்போது கூகுள் கூட்டப்பா என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இப்பட விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், கூகுள் கூட்டப்பா படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். அதோடு அந்த படத்தில் தனது குருநாதர் விக்ரமனின் மகன் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதையும் தெரிவித்த கே.எஸ். ரவிக்குமார், அந்த படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கூறினார்.