பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
கஜினிகாந்த் படத்தில் நடித்து வந்தபோது காதல் வயப்பட்ட ஆர்யாவும், சாயிஷாவும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியானா என்ற மகள் பிறந்தாள். இந்நிலையில் நேற்று ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்கள். அதோடு போட்டில் அவர்கள் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். அது குறித்த புகைப்படங்களை சாயிஷா வெளியிட்டுள்ளார். அதோடு ஆர்யாவுக்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
அதில், நான் உங்களை என்றென்றும் நேசிக்கிறேன், மதிக்கிறேன். என்னுடையவராக இருப்பதற்கு நன்றி. உலகத்தில் சிறந்த கணவர் மற்றும் அப்பா! காலத்தால் அழியாத நம்முடைய காதல் வாழ்க என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதேபோன்று ஆர்யாவும் தனது மனைவிக்கு ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் சிறந்த துணைவி சாயிஷா. என்னை அதிகம் காதலிக்கும் சாயிஷா என்றும் குறிப்பிட்டுள்ளார்.