ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
வினோத் இயக்கத்தில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் பிப்ரவரி 24ம் தேதி வெளிவந்தது. இன்றுடன் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் நிறைவடைகிறது. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படமாக இருந்தால் கூட இரண்டு வாரங்களைக் கடப்பது அபூர்வமாகவே உள்ளது. அந்த விதத்தில் 'வலிமை' படம் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி என்று சொல்லப்பட்டது.
ஆனால், 'ஜெய் பீம்' பட சர்ச்சை காரணமாக, சில மாவட்டங்களில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிட வேண்டாம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் பிரமுகர்கள் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். எங்கே தங்களது தியேட்டர்களுக்கு பாதிப்பு வருமோ என்று பயந்துள்ள அந்த மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்காரர்கள் பிரச்சினையை சமாளிக்க 'வலிமை' படத்தை 3வது வாரத்திலும் தொடர முடிவு செய்துள்ளார்களாம்.
'வலிமை' படம் நன்றாக ஓடுகிறது, அதனால் தூக்க முடியவில்லை. சூர்யாவுக்கும், 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கும் எங்களது வாழ்த்துகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமாளிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், 'வலிமை' படத்திற்கு ஒரு காட்சிக்கு பத்துப் பதினைந்து பேர்தான் வருகிறார்களாம். 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வேண்டாம் என்று சொன்னால் அதன்பின் அவர்களால் 'பீஸ்ட்' படத்தை வாங்கி திரையிட முடியாது. எனவே தான் இப்படி சமாளிக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
'எதற்கும் துணிந்தவன்' படத்தைத் தைரியமாக வெளியிடும் சில தியேட்டர்களில் பிரச்சினை எதுவும் எழவில்லை என்றால் உடனடியாக அவர்கள் 'வலிமை' படத்தைத் தூக்கிவிட்டு, 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறார்களாம்.