எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என எண்ணற்ற படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றியவர் ராஜு சுந்தரம். அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'ஏகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2008ல் வெளிவந்த அந்தப் படம் வெற்றிப் படமாக அமையாமல் தோல்விப்படமாக அமைந்தது.
அதன்பின் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் நடன இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் மீண்டும் இயக்கம் பக்கமும் திரும்பப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது தெலுங்கு நடிகரான சர்வானந்திடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறாராம். அக்கதையைக் கட்ட சர்வானந்த், முழு திரைக்கதையையும் தரச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.
14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க நினைக்கும் ராஜு சுந்தரத்தின் ஆசையும், முயற்சியும் நிறைவேறுமா என்பது சீக்கிரமே தெரிய வரும்.