ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க- 2 படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.
இந்தப்படத்தின் தமிழ் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தெலுங்கு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த நிலையில் அடுத்தபடியாக நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. விரைவிலேயே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவே தயாரித்து நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.