ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! |

விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் 'வைதேகி காத்திருந்தால்'. பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார்.
செந்தில் - மோனிஷா நடிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கண் கலங்கி நின்றவரை விஜய் டிவி கை கொடுத்து தூக்கிவிட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர். சரண்யா துராடி நடிக்கும் இந்த கெஸ்ட் ரோல், கேரக்டர் ரோலாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.