என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் 'வைதேகி காத்திருந்தால்'. பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார்.
செந்தில் - மோனிஷா நடிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கண் கலங்கி நின்றவரை விஜய் டிவி கை கொடுத்து தூக்கிவிட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர். சரண்யா துராடி நடிக்கும் இந்த கெஸ்ட் ரோல், கேரக்டர் ரோலாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.