இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷூ சுந்தர். நடிகை ஆக வேண்டும் என்ற கனவோடு, மீடியாவுக்குள் நுழைந்த வைஷூ சுந்தரை சின்னத்திரை இன்முகத்துடன் வரவேற்றது. தமிழ் சின்னத்திரை உலகில் பலராலும் அறியப்படும் வைஷூ சுந்தர், தற்போது தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளார். வைஷூ சுந்தர் தெலுங்கில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'குங்கமப்பூ' என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் புரோமோவையும் ஷேர் செய்துள்ளார். இந்த தொடர் ஸ்டார் தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
முன்னதாக தமிழில் 'ரன்' என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான வைஷூ சுந்தர், தற்போது விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றார். மேலும், சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.