ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்' ,'ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தினார். யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் இயக்கும் புதிய படத்திற்கு "இறைவன் மிகப்பெரியவன் " என தலைப்பு வைத்துள்ளார்.
இந்த படத்திற்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளனர். பட பிடிப்பு விரைவில் துவங்குகிறது. ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அமீரின் வழக்கமான கூட்டணியான ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.