ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிரபல நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி புதிய தொடர் ஒன்றின் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தமிழில் விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா தென்னிந்திய மொழிகளில் சீரியல்கள் நடித்து வந்தார். கடைசியாக 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்து வந்த இவர் திடீரென சீரியலை விட்டு விலகினார். கன்னட மொழியில் 'ரங்கநாயகா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படம் தள்ளிப்போனது.
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் சேனலில், 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய சீரியலில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதன் போஸ்டர் லுக்குகள் தற்போது வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட சன் டிவியின் 'கயல்', ஜீ தமிழின் 'ரஜினி' சீரியல்களை போலவே 'சொல்ல மறந்த கதை' ரச்சிதாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதன் மோஷன் போஸ்டரை தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா, சமூகத்தில் தனது குழந்தையுடன் கணவர் துணை இல்லாமல் வசித்து வரும் பெண் பற்றிய கதை என குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள், புரோமோக்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.